தானங்கள் பல வகை..
ஒவ்வொன்றும் ஒருவகை..
நாம் எதையாவது இன்னொருவருக்கு எந்த பிரதியுபகாரமும் கருதாமல் செய்வது தானமாகும்.
சில தானங்களை பார்க்கலாம்..
இரத்த தானம் - இரத்தம் வழங்குதல்.
இரண்ய தானம் - பொருள் வழங்குதல்.
அன்ன தானம் - உணவு வழங்குதல்.
வஸ்திர தானம் - உடை வழங்குதல்.
உறுப்பு தானம் - உடலிலுள்ள ஏதாவது உறுப்பை வழங்குதல்.
வாகன தானம் - வாகனம் வழங்குதல்.
இப்படி தானங்கள் பல வகை..
நாம் எதை இன்னொருவருக்கு எதையும் எதிர்பாராமல் கொடுத்தாலும் அது தானமென்றே கொள்ளப்படும்.
இப்போது நான் சொல்ல வந்தது சிலருக்கு புது விடயமாக இருக்கலாம்..
ஒரு பெண்ணை பிள்ளையாகப் பெற்று அவளை வளர்த்து பின் ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களும் ஒரு தானம் செய்கிறார்கள்..
அது தான் கன்னிகாதானம் !!!
ஆம்..
யோசித்துப் பாருங்கள்..
பெண்ணை பிள்ளையாகப் பெற்று வளர்த்து பின் திருமணம் வரை சென்று நடத்தி முடிக்கும் பெற்றோர்கள், தன் மகள் நலமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன எதிர்ப்பார்ப்பர் ????
ஆகவே அதுவும் ஒரு தானம்..
ஒரு பெண்ணை இன்னொருவருக்கு தானமாக கொடுப்பதால் அது கன்னிகாதானம்.. ( கன்னி + தானம் = கன்னிகாதானம் )
இதுவே ஒரு ஆணை பிள்ளையாகப் பெற்று வளர்த்து திருமணம் நடத்தி வைக்கும் பொழுது இன்னொருவரிடமிருந்து அவரின் பிள்ளையை ( மகளை ) தானமாகப் பெறுகின்றனர்.
ஆக அது பொறுப்பு..
இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் மகளைப் பெற்று விட்டோமே என்று ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம் இந்தக் காலத்தில்..
அவர்களுக்குரிய தகவல் தான் இது..
அவர்கள் தங்கள் மகளை திருமணம் நடத்தி வைத்து கன்னிகாதானம் செய்வதால் அவர்களைன் பாவ புண்ணிய கணக்கில் புண்ணியமே சேர்கிறது..
மகனைப் பெற்று திருமணம் நடத்தி வைக்கும் பொழுது இன்னொருவரிடமிருந்து கன்னியை ( பெண்ணை ) தானமாகப் பெறுவதால் பொறுப்பே அதிகரிக்கிறது..
அது புரியாமல் பெண்ணைப் பெற்று விட்டோமே என்று ஏங்கும் பெற்றோர்களும், ஆணைப் பெற்று விட்டோமே என்று சந்தோஷப்படும் பெற்றோர்களுமாய் மாறி நடக்கிறது தற்பொழுது...
இந்த தகவல் நான் அண்மையில் கேட்டுத் தெரிந்து கொண்டது..
யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
__________________________________________________________________
ஒரு செய்தி...
வரும் திங்கள் முதல் எனக்கு கல்லூரி ஆரம்பமாகிறது.
அதனால் அதற்குரிய வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் நண்பர்களின் பதிவுகளை படிக்கவோ, பின்னூட்டமிடவோ இயலவில்லை..
இன்னும் சில நாட்களில் திரும்பவும் வழமைப் போல் இல்லையெனினும் படித்து பின்னூட்டமிடும் அளவுக்காவது நேரமிருக்கும் என்று நம்புகிறேன்..
அப்போது கட்டாயமாக வருவேன்...
நண்பர்கள் அனைவரும் மண்ணித்துக் கொள்ளவும்...
அன்புடன்,