உடனே இது ஏதோ 'கீதா' பத்தினதுன்னு நினைக்க வேணாங்க...
:-)
மின்னஞ்சலில் வந்த சரக்கு.
மறந்து போவதற்கு
எதை நீ புரிந்துகொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு
என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்
வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு
எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்
எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது
இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்.
--------------------------------------------------------------------------------------------------
இது அறியாமை :
சிறிய காலமாகவே ஆதிக்கம் செலுத்திவரும் இணையம்,மின்னஞ்சல் பத்தி அவ்வளவா யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிறேன்...
ஏன்னா, எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் வயசானவங்கெல்லாம் கணனி பத்தி பேசும்போதெல்லாம் மின்னஞ்சல் அனுப்புறதுக்கு 'எனக்கு ஒரு internet அனுப்புங்க'ன்னும் இணையத்தில் உலாவும் போது 'நான் இப்ப emailல இருக்கேன்'ன்னும் சொல்லுறத கேட்டிருக்கேன்...
ஏன் இது??? இது இணையம் பத்தியும் மின்னஞ்சல் பத்தியும் அவங்களோட அறியாமைன்னு சொல்லுறதா??? அல்லது இது அடிப்படைல வேற காரணம் இருக்கா???
ஒருமுறை எனது நண்பன் ஒருவனின் வீட்டுக்கு சென்றிருந்த போது அவனின் தந்தை அவரின் நண்பரோடு கதைத்த உரையாடல் இது :
'முன்னேல்லாம் நாம ஏதாவது லெட்டர் எழுதுறதுன்னா கையால எழுதினோம். ஆனா இப்போல்லாம் சின்ன ஃபோன் நம்பர் எழுதுறதுக்கும் கம்பியூட்டர் முன்னாடி போய் உக்கார்ந்திர்ரானுங்க...'
இதுக்கும் காரணம் என்ன???
வேலையை இலகுவாக கொஞ்சம் சாதனங்களை பாவிச்சு செய்யுறதை அவங்க விரும்புறாங்க இல்லயா???
இந்த விஷயம் சம்பந்தமா பின்னூட்டங்களை எதிர்ப்பார்க்கிறேன்...
விளங்கினவங்க சொல்லுங்க...
