Saturday 24 February 2007

தனிமை


1) ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்

2)
ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக?
யாருக்காக?

3)
மலைக்கிராமத்தின்
குளிர்காலத்தனிமை
ஆழமுறவே செய்கிறது,
விருந்தாளிகள் போய்விட்ட பிறகு,
இலைகளும் புற்களும் மட்கிய பிறகு,
தொந்தரவு செய்கின்ற எண்ணங்கள்.
தனிமைSocialTwist Tell-a-Friend

1 . பின்னூட்டங்கள்:

Anonymous said...

இவை யாவும் உங்களுடைய படைப்பா???
வாழ்த்துக்கள் நன்றாக உள்ளன

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.