Saturday 12 September 2009

ஸ்ப்பாஆஆஆ....

10 . பின்னூட்டங்கள்
காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு..
கணனி பக்கமே வரமுடியல...
நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-)

இரண்டு வாரத்துக்கு முன்னால நண்பர் தேவா அவர்கள் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்
அது தான் போடலாம்ன்னு ஒரு ஐடியா...

1. A – Avatar (Blogger) Name / Original Name : /

வேத்தியன் / ஜெ.பிரசன்னா

2. B – Best friend? :

6 வருஷமா என்னைப்பற்றி முழுமையாக அறிந்தவனாக இருக்கும் என் நண்பன் நிஷாந்தன்.

3. C – Cake or Pie? :

Cake.

4. D – Drink of choice?

Milkshake.

5. E – Essential item you use every day?

வேற என்ன.... மொபைல் தான்...

6. F – Favorite color?

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு....

7. G – Gummy Bears Or Worms :

புரியல சாரே...

8. H – Hometown?

யாழ்ப்பாணம்.

9. I – Indulgence? :

இதுவரை எதுவுமில்லை...

10. J – January or February?

ஜனவரி... வருடத்தின் முதல் மாதம்...

11. K – Kids & their names?

நானே ஒரு kid... எனக்கு ஒரு kidஆ????

12. L – Life is incomplete without?

Helping others...

13. M – Marriage date?

இது நேக்கு கிடையாது...

14. N – Number of siblings?

ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு...

15. O – Oranges or Apples?

Apples...

16. P – Phobias/Fears?

இருக்கு...
போனோஃபோபியா.. மொபைல் இல்லாம இருக்கவே முடியாது...
புக்கோஃபோபியா.. புத்தகத்தை கையில தூக்கினா தூக்கம் வரும்...
இதையும் விட இன்னும் நிறைய இருக்கு.. அப்புறமா சொல்றேன் ஓகே...

17. Q – Quote for today?

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்..
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கிக் கொள்...

18. R – Reason to smile?

காரணமில்லாம சிரிச்சா பைத்தியம்ன்னு சொல்றாங்க...
சிரிக்கிறதுக்கு காரணம் கேட்டாலும் பைத்தியம்ன்னு சொல்றாங்க...
என்ன சமூகம் இது???

19. S – Season?

வேறென்ன????
மழைக்காலம் தான்...

20. T – Tag 4 People?

இந்த உலகம் டச்சுல இல்லாததுனால யார் எழுதினாங்க, யார் எழுதலைன்னு தெரியல..
அதனால இதுல யாரையும் மாட்டி விடற நிலைமையில நான் இல்லைங்கோ...

21. U – Unknown fact about me?

நிறையா இருக்கு..
எதைச் சொல்ல???

22. V – Vegetable you don't like?

கீரை

23. W – Worst habit?

அதிகமா தூங்குறது... :-)

24. X – X-rays you've had?

இது என்ன லவ்வர் கூட சினிமாக்கு போற மாதிரி ஞாபகம் வைக்கிற மாட்டரா???
அப்போ எடுத்துட்டு அப்போவே மறந்துறனும்...
நோய் எல்லாம் எப்போ வந்து எப்போ போகுதுன்னு யோசிக்கவே கூடாதுங்கிறது மை பாலிசி...

25. Y – Your favorite food?

புட்டும், கத்தரிக்காய் பொரியலும்...

26. Z – Zodiac sign?

Zodiac sign எல்லாம் நமக்கு தெரியாதுங்கோவ்...
பொதுவா ஒரு sign போடுறேன்...
பாத்துக்கிங்க...
ஓகே டாட்டா..
பை பை...

மீண்டும் சந்திப்போம்...
ஸ்ப்பாஆஆஆ....SocialTwist Tell-a-Friend

Sunday 19 July 2009

ஐ ஆம் பேக்...

33 . பின்னூட்டங்கள்
வணக்கம் நண்பர்களே...


காலேஜுக்கு சேர்ந்ததிலிருந்து இப்பொழுது தான் வலைப் பக்கம் வந்து பார்க்க முடிந்தது.
வந்து பார்த்ததும் ஒரே அதிர்ச்சி..
நண்பர் தேவா ஒரு விருது தந்துள்ளார்.
அந்தப் பதிவு படிக்க இங்கு சொடுக்கவும்.



நன்றி தேவா...
இதை யாருக்குக் கொடுப்பது என்று அடுத்த பதிவில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது சொல்கிறேன்..
இப்பொழுது தான் ஒரு பிரவுஸிங் சென்டர் கண்ணில் பட்டது.
உடனே ஓடி வந்தாச்சு..
இனி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பதிவுகள் போடலாம்...
:‍-)
ஐ ஆம் பேக்...SocialTwist Tell-a-Friend

Wednesday 1 July 2009

கன்னிகாதானம் !

26 . பின்னூட்டங்கள்
தானங்கள் பல வகை..
ஒவ்வொன்றும் ஒருவகை..


நாம் எதையாவது இன்னொருவருக்கு எந்த பிரதியுபகாரமும் கருதாமல் செய்வது தானமாகும்.
சில தானங்களை பார்க்கலாம்..


இரத்த தானம் - இரத்தம் வழங்குதல்.

இரண்ய தானம் - பொருள் வழங்குதல்.

அன்ன தானம் - உணவு வழங்குதல்.

வஸ்திர தானம் - உடை வழங்குதல்.

உறுப்பு தானம் - உடலிலுள்ள ஏதாவது உறுப்பை வழங்குதல்.

வாகன தானம் - வாகனம் வழங்குதல்.


இப்படி தானங்கள் பல வகை..
நாம் எதை இன்னொருவருக்கு எதையும் எதிர்பாராமல் கொடுத்தாலும் அது தானமென்றே கொள்ளப்படும்.

இப்போது நான் சொல்ல வந்தது சிலருக்கு புது விடயமாக இருக்கலாம்..

ஒரு பெண்ணை பிள்ளையாகப் பெற்று அவளை வளர்த்து பின் ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களும் ஒரு தானம் செய்கிறார்கள்..
அது தான் கன்னிகாதானம் !!!



ஆம்..
யோசித்துப் பாருங்கள்..
பெண்ணை பிள்ளையாகப் பெற்று வளர்த்து பின் திருமணம் வரை சென்று நடத்தி முடிக்கும் பெற்றோர்கள், தன் மகள் நலமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன எதிர்ப்பார்ப்பர் ????

ஆகவே அதுவும் ஒரு தானம்..
ஒரு பெண்ணை இன்னொருவருக்கு தானமாக கொடுப்பதால் அது கன்னிகாதானம்.. ( கன்னி + தானம் = கன்னிகாதானம் )


இதுவே ஒரு ஆணை பிள்ளையாகப் பெற்று வளர்த்து திருமணம் நடத்தி வைக்கும் பொழுது இன்னொருவரிடமிருந்து அவரின் பிள்ளையை ( மகளை ) தானமாகப் பெறுகின்றனர்.
ஆக அது பொறுப்பு..

இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் மகளைப் பெற்று விட்டோமே என்று ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம் இந்தக் காலத்தில்..
அவர்களுக்குரிய தகவல் தான் இது..

அவர்கள் தங்கள் மகளை திருமணம் நடத்தி வைத்து கன்னிகாதானம் செய்வதால் அவர்களைன் பாவ புண்ணிய கணக்கில் புண்ணியமே சேர்கிறது..

மகனைப் பெற்று திருமணம் நடத்தி வைக்கும் பொழுது இன்னொருவரிடமிருந்து கன்னியை ( பெண்ணை ) தானமாகப் பெறுவதால் பொறுப்பே அதிகரிக்கிறது..

அது புரியாமல் பெண்ணைப் பெற்று விட்டோமே என்று ஏங்கும் பெற்றோர்களும், ஆணைப் பெற்று விட்டோமே என்று சந்தோஷப்படும் பெற்றோர்களுமாய் மாறி நடக்கிறது தற்பொழுது...

இந்த தகவல் நான் அண்மையில் கேட்டுத் தெரிந்து கொண்டது..
யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

__________________________________________________________________


ஒரு செய்தி...

வரும் திங்கள் முதல் எனக்கு கல்லூரி ஆரம்பமாகிறது.

அதனால் அதற்குரிய வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் நண்பர்களின் பதிவுகளை படிக்கவோ, பின்னூட்டமிடவோ இயலவில்லை..

இன்னும் சில நாட்களில் திரும்பவும் வழமைப் போல் இல்லையெனினும் படித்து பின்னூட்டமிடும் அளவுக்காவது நேரமிருக்கும் என்று நம்புகிறேன்..
அப்போது கட்டாயமாக வருவேன்...

நண்பர்கள் அனைவரும் மண்ணித்துக் கொள்ளவும்...


அன்புடன்,
கன்னிகாதானம் !SocialTwist Tell-a-Friend

Wednesday 24 June 2009

100வது பதிவு - கொழுப்பு !!!

51 . பின்னூட்டங்கள்
வணக்கம் நண்பர்களே...

இது எனது 100வது பதிவு. இதுவரை காலமும் நான் எழுதிய ஆக்கங்களுக்கு எனக்கு ஊக்கம் அளித்து என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...

இன்னும் அதிக பதிவுகள் எழுத் என்றும் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்...

________________________________________________________________________

இன்று நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் தங்கைக்கு திருமணம் என்று கூறியிருந்தார்...

புதுமணத் தம்பதிகளுக்கு எனது இதயபூர்வமான திருமணநாள் நல்வாழ்த்துகள் !!!

________________________________________________________________


கொழுப்பால நமது மக்கள் அதிகம் கஷ்டப்படுறாங்கப்பா...
அதிகமா கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பின்பு தொப்பையைக் குறைக்க காலையில எழும்பி ஓடுறது...
அதுமட்டுமில்லாம இப்போ எல்லா வீடுகளிலும் சகலருக்கும் இலவச இணைப்பா சக்கரை வியாதி வேற வந்து சேருது...
So, சாப்பிடுறத பாத்து கவனமா சாப்பிட்டு நோயில்லாம சந்தோஷமா வாழனும்..
என்ன நான் சொல்றது ??
:-)

உண்மையில எல்லோருக்கும் கொழுப்புச் சத்து அவசியம்.
போசணை அகத்துறிஞ்சல் (Nutrient absorption), நரம்பு கணத்தாக்கம் கடத்தல், கலமென்சவ்வின் (Cell membrane) நிலையைப் பேணல் போன்ற காரணங்களுக்காக நமது உடலில் கொழுப்பு அவசியமாகிறது.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு ஒளவையார் சும்மாவா சொல்லி வச்சாரு ??
அளவுக்கு மிஞ்சிய கொழுப்பினால் எடை அதிகரிப்பு, இதய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம்...
அதனால அளவோடு கொழுப்பு இருக்கணும்..
இல்லைன்னா காலையில பீச் ஓரத்துல தான் ஓடனும்...
:-)


தேவையான கொழுப்புகள்

ஒற்றை நிரம்பாத கொழுப்புகள் (Monounsaturated Fats)


ஒற்றை நிரம்பாத கொழுப்புகள் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும், தாழ் அடர்த்தி லிப்போபுரோட்டீனைக் கரைக்கவும் (LDL - Low Density Lipoprotein) உதவும்.
அதேவேளை HDL எனப்படும் உயர் அடர்த்தி லிப்போபுரோட்டீனை அதிகளவில் உற்பத்தி செய்ய உதவும். (HDL - High Density Lipoprotein).

நிலக்கடலை, பாதம்பருப்பு, கனோலா எண்ணை, ஒலிவ் எண்ணை ஆகியவற்றில் இவ்வகை கொழுப்புகள் அதிகமுண்டு.
இவை உடல் எடை குறைவுக்கு அதிகம் உதவும்...


பன்மை நிரம்பாத கொழுப்புகள் (Polyunsaturated Fats)



இவ்வகை கொழுப்புகளும் LDLஐக் குறைக்க உதவும்.

இவை கடலுணவு, சல்மொன் மற்றும் மீன் எண்ணை, சோளம், சோயா, சூரியகாந்தி எண்ணை ஆகியவற்றில் அதிகமுண்டு.

ஓமெகா 3 கொழுப்பமிலங்கள் இந்த வகையைச் சார்ந்தது தான்...


தேவையற்ற கொழுப்புகள்

நிரம்பிய கொழுப்புகள் (Saturated Fats)



நிரம்பிய கொழுப்புகள் உடலுக்கு தீங்கானது.
இவை இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிப்பதுடன், LDLஇன் அளவையும் அதிகரிக்கும்.

இவை அதிகமாக விலங்குணவுகளில் குறிப்பாக இறைச்சி, பாலுற்பத்திப் பொருட்கள், முட்டைகள், கடலுணவு ஆகியவற்றில் காணப்படும்.
சில தாவர உணவுகளிலும் இருக்கும்.
குறிப்பாக பால்ம் எண்ணை, தேங்காய் எண்ணை ஆகியவற்றில் காணப்படும்.


Trans Fats



அதிக காலம் பழுதடையாமல் இருக்க எண்ணையை நீர்மயப்படுத்தும் தொழிநுட்பம் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் உருவானது தான் இவ்வகை கொழுப்பமிலங்கள்.
இது சற்று சிக்கலான தொழிநுட்பமாகும்.

இவ்வகை கொழுப்புகள் அதிகமாக வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் தான் இருக்கும்.
முக்கியமாக அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகள், வறுக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருக்கும்.
மைக்ரோவேவ் பொப்கோர்ன், French Fries என்று சொல்லப்படும் கிழங்குப் பொரியல் ஆகியவை இந்த கொழுப்பு அடங்கிய உணவுகளுக்கு சிறந்த உதாரணங்கள்.

ஆகவே சிறந்த உணவு வகைகளை உண்டு நலமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
:-)

அன்புடன்,
100வது பதிவு - கொழுப்பு !!!SocialTwist Tell-a-Friend

Sunday 21 June 2009

மன உளைச்சலுக்கு என்ன தான் தீர்வு ???

50 . பின்னூட்டங்கள்

தற்போது உலகம் வேகமாக நகர்கிறது.
தினமும் தலைக்கு மேல் வேலை.
கணவன், மனைவி முகத்தை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதென்பது குறைந்து வருகிறது.
குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக இருந்து உணவு உட்கொள்வதென்பது குறைந்து வருகிறது.
அனைவருக்கும் அளவுக் கதிகமான வேலை.
இதனால் மிஞ்சுவது என்ன??
தலையிடும், மன உளைச்சலும் தான்...


இங்கு மன உளைச்சலை வென்று எவ்வாறு சந்தோஷமாக இருக்கலாம் என்பது பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.
மன உளைச்சலை எதிர்கொள்வது என்பது இலகுவான ஒன்று அல்ல.


மன உளைச்சல் என்பது தற்போதைய உலகில் எல்லோரும் அனுபவிப்பது தான்..
ஆனால் பிரச்சினை என்னவென்றால் யாரும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள நினைக்காதது தான்...
இதனால் மனதின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகுமே ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பேயில்லை...
”நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என இன்னொருவரிடம் சொன்னால் எங்கே அவர் நம்மை தப்பாக புரிந்து கொண்டு விடுவாரோ என்று வெட்கப்பட்டே பலர் அது பற்றி வெளிப்படுத்துவது கிடையாது...


உங்களுடைய மனதின் தாக்கத்தைக் குறைக்க இலகுவான வழிகளே அதிகமாக இருக்கின்றன...
அவை என்னவென்று பார்க்கலாம்...


மனதுவிட்டு பேசுதல் :
மன உளைச்சலை மனதுக்குள்ளேயே வைத்து பூட்டி விடுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
இன்னொருவரிடம் பேச வேண்டும். அவர் சக நண்பராக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், நலன் விரும்பியாக இருக்கலாம்..
அவருடன் மனம்விட்டு பேசுவதால் உங்களுக்கு மனதின் பாரம் சற்று இறங்குவதை நீங்களாகவே உணர்வீர்கள்.
சிலவேளை நீங்கள் விஷயத்தை பகிர்ந்து கொண்டவர் அந்தப் பிரச்சினைக்கு தகுந்த தீர்வையும் சொல்வார்...
எதையும் வெளிக்காட்டாமல் இருந்தால் மன உளைச்சல் அதிகமாகி நாளடைவில் தற்கொலைக்குக் கூட முயல்வர்...

இதைச் சொல்லும் போது மிகுந்த மனவேதனை..
என்னுடன் முதலாம் வகுப்பிலிருந்து உயர்தரம் வரை படித்த என்னுடைய நண்பன் ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான்..
வெளியில் நான் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்தாலும் இன்னும் என்னுள் அந்த சோகமும் அது தந்த தாக்கமும் மறையவே இல்லையென்பது தான் உண்மை.

அவனுக்கு என்ன பிரச்சினை இருந்திருந்தால்ம் அதை எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தால் நாம் நம்மாலான உதவிகளைச் செய்து அல்லது தீர்வுகளை சொல்லியிருப்போம்.
அதை விட்டுவிட்டு தற்கொலை செய்வதென்பது மிகுந்த கோழைத்தனம்.

ஆகவே வாய் திறந்து பேச வேண்டும்.
அதுவே பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்...


சத்துள்ள உணவு உட்கொள்ளல் :
மன உளைச்சலுக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா???
சம்பந்தம் இருக்கிறது.
சாதாரணமாக நாம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் போது ஏதாவது ஒரு வேலையை தெளிவாக செய்ய முடிகிறதா??
முடிவதில்லை தானே???
சாதாரண ஒரு வேலையையே தெளிவாக செய்ய முடிவதில்லையென்றால் மன உளைச்சலுக்குக் காரணமான பிரச்சினைக்கு தெளிவாக ஒரு முடிவு காண்பது என்பது கனவிலும் சாத்தியமில்லை..

முதலில் வேளா வேளைக்கு சாப்பிட்டு உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மனதை தாக்கும் ஒரு பிரச்சினைக்கு தெளிவாக ஒரு தீர்வு காணலாம்...


தினமும் உடற்பயிற்சி செய்தல் :
அதிகமாக தொப்பையாக இருப்பவர்களிடமும் அதிகமாக மெல்லியதாக இருப்பவர்களிடமும் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. (முன்பு படித்தது தான். எங்கு என்பது ஞாபகமில்லை..)
ஆகவே மனதை திடமாக வைத்துக் கொள்ள முதலில் உடலை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏதாவது விளையாட்டில் தினமும் ஈடுபட வேண்டும்.
அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அப்போது நமது உடல் சுறுசுறுப்பாக இயங்குவதோடு இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் மனதுக்கும் ஒரு தெம்பு கிடைப்பதை நீங்களாகவே உணர்வீர்கள்...
மனது புத்துணர்ச்சியுடன் காணப்பட்டால் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பது இலகுவாக சாத்தியமாகும் அல்லவா ???

அத்துடன் தினமும் குறைந்தது ஆறு மணிநேர நித்திரையும் அவசியம்.
நித்திரைக் குழப்பமும் மன அமைதியின்மைக்கு காரணமாக இருக்கும்...


தியானம் :
”நமது மனம் சரியில்லை. ஒரே பிரச்சினை” என்று நாம் பலரிடம் சொன்னால் உடனே அவர்கள் நமக்கு சொல்வது தியானம் செய்யுங்கள் என்று தான்...
தியானம் தான் இலகுவான வழி என்றும் சொல்வார்கள்..

உண்மை என்ன தெரியுமா???
தியானம் என்பது தேவையேயில்லாத ஒன்று..
யாருக்கு ???
மேற்கூறிய வழிகளை செவ்வனே செய்து வரும் ஒருவருக்கு...

அந்த இலகுவான வழிகளை எல்லாம் விட்டுவிட்டு மனக் குழப்பத்துடன் தியானம் செய்தால் மிகுந்த கஷ்டமாகிவிடும்.
யோசித்துப் பாருங்கள்.
தியானம் மேற்கொள்ள முதலில் தேவையானது நிம்மதியான மனம்.
அது இல்லையென்று தானே பிரச்சினையே..
அங்கே இருந்து எங்கு நாம் தியானம் மேல் கவனம் செலுத்துவது ??
:-)

அதற்காக தியானம் செய்ய வேண்டாம் என்று நான் யாருக்கும் சொல்லப் போவதில்லை..
மேற்கூறிய வழிகளை முதலில் செய்து தெளிவான மனதௌ முதலில் பெறுங்கள்.
பிறகு ஒரு அமைதியான இடத்தில் இருந்து கண்களை மூடி தியானம் மேற்கொள்ளலாம்...


மருத்துவ ஆலோசனை :
மேற்கூறிய இலகுவான வழிகள் மூலம் அமைதி பெறாத ஒருவர் அடுத்து செய்ய வேண்டியது ஒரு மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது தான்...

மருந்துகள் மூலம் இதை குணப்படுத்த முடியாது..
எப்படி சிகிச்சை அளிப்பது என்பது அவர்களுக்கு தெரியும்..
அவர்களின் மூலம் சிறந்த பயன் பெறலாம்...


அன்புடன்,
மன உளைச்சலுக்கு என்ன தான் தீர்வு ???SocialTwist Tell-a-Friend

Thursday 18 June 2009

எடை கூடிய நாயை வளர்த்ததற்கு உரிமையாளருக்கு தடை !!!

14 . பின்னூட்டங்கள்
தனது வளர்ப்பு பிராணியான நாயின் உடல்நலத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால் நாயின் உடல் எடை கூடியதன் விளைவாக உரிமையாளருக்கு அதற்கு மேல் பிராணிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது நடந்தது இங்கிலாந்தில்...



Border Collie இனத்தைச் சேர்ந்த Taz...


ஐந்தே வயதான Taz எனப்படும் இந்த நாயானது border collie இனத்தை சார்ந்தது.
இந்த வளர்ப்பு நாயின் சொந்தக்காரர் 63 வயதான ronald West என்பவர்.
நாயின் உடல்நலத்தைப் பற்றி சிந்திக்காமல் உணவுமுறையை பழக்கியதால் அந்த நாயின் உடல் எடை இருக்க வேண்டிய அளவிற்கு இருமடங்காக இருந்தது.


தகவல் அறிந்தவுடனே Brighton and Hove City Councilஆல் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.
அப்போது நாயின் எடை 88 றாத்தலாக இருந்ததாம்.


இதனால் Ronald West குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் அடுத்த 12 மாதங்களுக்கு எந்த ஒரு வளர்ப்பு பிராணியையும் வளர்க்க முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


யாரோ ஒருவர் கொடுத்த தகவலின் படி மிருக நல அதிகாரிகள் Brightonஇலுள்ள Westஇன் வீட்டுக்கு சென்றுள்ளனர்.


”நான் ஒரு வளர்ப்புப் பிராணி விரும்பி எனவும் தனது நாயுக்கு சிறந்ததை தர வேண்டும் என முடிவு செய்து செயற்பட்டதன் விளைவே இது” எனவும் West கூறியுள்ளார்.


தற்போது Tazஇன் எடை 58 றாத்தலாக குறைந்துள்ளதாம்.
முதலில் தொடர்ந்து 10 நிமிடம் கூட ஓட முடியாமலிருந்த Taz தற்போது ஒரு மணிநேரம் வரை ஒடுகிறதாம்...


தற்போது Taz வளர்ப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாம்..
ஆனால் Westஇடம் அல்ல... :-)
Councilக்கு West அபராதமாக £1,477 செலுத்த வேண்டும்.


நம்ம நாடுகள்ல எல்லாம் மிருகங்களை வதை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா????
தெரியாதா????
விடை
|
|
|
|
|
|
ஒன்னுமே நடக்காது...
:-(

வருத்தம் தான்...


அன்புடன்,
எடை கூடிய நாயை வளர்த்ததற்கு உரிமையாளருக்கு தடை !!!SocialTwist Tell-a-Friend

Wednesday 17 June 2009

மணற் சிற்பங்கள்...

40 . பின்னூட்டங்கள்















அன்புடன்,
மணற் சிற்பங்கள்...SocialTwist Tell-a-Friend

Sunday 14 June 2009

தமிழ் பதிவர்களின் அலெக்ஸா தரவரிசை...

38 . பின்னூட்டங்கள்
சிறிது நாட்கள் வேலைகளுக்குப் பிறகு ப்ளாக் பக்கம் வந்தா ஏதோ அலெக்ஸா ரேங்கிங்ன்னு பேச்சு அடிப்பட்டது...

சரி நாமளும் பாக்கலாம்ன்னு சொல்லி போனா அங்கே ஒட்டு மொத்த தளங்களினது கணக்கு வழக்கும் இருக்கு...

நாம விடுவோமா???
நம்ம பதிவர்களின் தரவரிசையையும் அறிந்தேன்..
அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

இதிலுள்ள தகவல்கள் 14/06/2009 காலை 11 மணியிலிருந்து பகல் 2 மணிக்குள் நான் பார்வையிட்டவை...
ஆகவே இப்போது தகவல் மாறியிருந்தால் மன்னிக்கவும்...

நான் பெயர் குறிப்பிட மறந்த பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்...
உங்கள் தளத்தின் தகவல்களை ”http://www.alexa.com/siteinfo/உங்கள் தள முகவரி” என்ற முகவரியினூடு பார்வையிடலாம்...

பதிவர்களின் வலைப்பூவின் பெயரையே குறிப்பிட்டுள்ளேன்...
வலைப்பூ பெயர்களிலேயே தொடுப்பும் இருக்கிறது.
அதை க்ளிக்கி அலெக்ஸா பக்கம் சென்று பார்க்கலாம்...































































முதல் 200,000க்குள் நண்பர் தேவாவின் வலைப்பூ இருப்பது மிக்க மகிழ்ச்சி...

அன்புடன்,
தமிழ் பதிவர்களின் அலெக்ஸா தரவரிசை...SocialTwist Tell-a-Friend

Saturday 13 June 2009

என்ன செய்யட்டும் ???

27 . பின்னூட்டங்கள்
கடந்த ஒரு வார காலமாக ஒரே வேலை...



வலையுலகம் பக்கம் தலைவைத்தே படுக்க இயலவில்லை.
சக பதிவர்களின் பதிவுகள் எல்லாவற்ரையும் முழுவதுமாக படிக்க இயலாவிட்டாலும் ஏதோ அவசர அவசரமாக படித்து முடித்தேன்.
பின்னூட்டம் போட மறந்துவிட்டேன்.
மன்னிக்கவும்... :-)



வேலை வேலைன்னு சொன்னா போதுமா??
என்னா வேலைன்னு சொல்ல வேணாம்???
இந்த கமிங் ஜூலையில தான் என்னோட காலேஜ் தொடக்கம்.
அட்மிஷன் சம்பந்தமான வேலைகள், விசா சம்பந்தமான வேலைகள்ன்னு ஒரே பிஸி...
அது தான் காரணம்...



ஒருமாதிரியா வேலைகள் எல்லாம் முடிஞ்சுதுங்க..
இனி கொண்டாட்டம் தான்...
ரொம்ப குஷியா நாளைக்கு ஒரு பதிவு போட்டுட்டுருந்த என்னைப் போய் இந்த வேலைகள் எல்லாம் கெடுத்து பதிவுகள் வாசிக்கக் கூட முடியாத சூழுலுக்கு கொண்டு போய் விட்டுருச்சு... :-(



எங்கடா இவன் தொல்லை குறைஞ்சு போச்சுனு யாரும் சந்தோஷப்பட வேண்டாம்..
வேலை முடிஞ்சு எழுந்திட்டேன்...
இதோ வரேன்... :-)



இப்பிடில்லாம் 10 நாளா ஒரு பதிவும் எழுதாம, வாசிக்காம இருந்ததேயில்லப்பா...
என்னா கஷ்டமா இருக்கு... :-)



விசா எடுக்கப் போன போது ஒரு சம்பவம்...
அப்ளிகேஷன் செண்டர் உள்ளே யாரும் மொபைல் பாவிக்கக் கூடாதுன்னு முன்னாலேயே எழுதிப் போட்டாருக்காங்க...
நாம யாரு??
ஸ்கூலுல ஆசிரியர் சொல்லியே கேக்கலை..
இவிங்க சொல்லியா கேக்கப் போறோம்???


உள்ள இருந்த போது நண்பன் ஒருவன் மொபைல்ல கூப்பிட்டான்..
எடுத்து பேசிட்டு இருந்த போது ஒருத்தன் வந்து வேணாம்ன்னான்..
வச்சிட்டேன்...


எனக்கு பக்கத்துல ஒரு “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” ரக ஃபிகர்...
அவங்க மொபைல் கூட சிணுங்க எடுத்து பேசினாங்க...
ஒருத்தன் வந்து வேணாம்ன்னு சொல்லல !!!
முதல்ல எனக்கு தடுத்தவனைப் பார்த்தா அவன் ஒரு ஓரமா நின்னு சைட்டிங்...



அவனுக்கு மேல கோபமா வந்தாலும்.........
என்னை மாதிரித் தானே அவனும் இருப்பான்னு நெனைச்சு மனசை கட்டுப் படுத்திகிட்டேன்....
:-)


இனி வழமைப் போலவே பதிவுகள் வரும்..
பின்னூட்டங்கள் வரும்..
வெகு சீக்கிரமா 100வது பதிவும் வரப்போகுது...
செஞ்சரி பதிவு போட ஆவலா இருக்கேன்...
:-)


அன்புடன்,
என்ன செய்யட்டும் ???SocialTwist Tell-a-Friend

Thursday 4 June 2009

சிங்களம் 2 தமிழ்...

62 . பின்னூட்டங்கள்

வலை நண்பர்களே,
சில தமிழ் வார்த்தைகளையும் அதற்குரிய சிங்கள வார்த்தைகளையும் தருகிறேன்.

முதல்ல வாசிங்க.
அப்புறம் பாருங்க சிங்களம் எவ்வளவு ஈஸின்னு...
:-)



செளபாக்கியம் - செளபாக்கிய
பெயர்(நாமம்) - நம
சத்தம் - ஷத்த
அம்மா - அம்மே
காலம் - காலய
வியாபாரம் - வியாபார
ஆடம்பரம் - ஆடம்பரய
ஆச்சிரமம் - ஆசிரமய
உலகம் - லோகய
கடை - கடய
தமிழ் - தெமல
சிரமதானம் - ஷ்ரமதான
ஆசை - ஆசாவ
வீதி - வீதிய
சபை - சபாவ



என்ன சிங்களம் ஈஸியா இருந்துச்சா???
ஏன் ஈஸியா இருக்காது, தமிழ் வார்த்தையில ஒரு எழுத்தை மட்டும் மாத்தி வச்சா ???
:-)


என்ன தான் சொன்னாலும் சிங்களத்துல இருந்து தான் தமிழன் வார்த்தைகளை(யும்) சுட்டான் என்பதற்கு இது ஒன்றே சாட்சி என்று நம் சகோதர சிங்கள மக்கள் கூறிக் கொள்வதாக உளவுத்துறை அறிக்கை விட்டுருக்கு...
என்ன செய்ய ???
வழக்கம் போல இதையும் நம்புவோம்...



சிட்டுவேஷன் சாங் கேளுங்க...

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ???


அன்புடன்,
சிங்களம் 2 தமிழ்...SocialTwist Tell-a-Friend

Monday 1 June 2009

டைட்டானிக் விபத்தில் பிழைத்த கடைசி நபரும் மரணம் !

44 . பின்னூட்டங்கள்
டைட்டானிக் கப்பல் பெரும் விபத்து நிகழ்ந்த நேரத்தில் அந்தக் கப்பலில் இருந்து உயிர்தப்பியவர்கள் பயணம் செய்தவர்களோடு ஒப்பிடும் போது வெகு சிலர் மட்டுமே.


அப்படி உயிர்தப்பியவர்களில் பலர் மரணித்துவிட்டனர்.
உயிருடன் இருந்தவர் Millvina Dean.
அவரும் தனது 97வது வயதில் மரணமாகி இருக்கிறார்.


உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த சனிக்கிழமை காலையில் இங்கிலாந்தின் Southampton நகரில் உயிரிழந்திருக்கிறாராம்.
டைட்டானிக் கப்பலில் அவர் பயணம் செய்யும் போது அவருக்கு வயது 9 வாரங்கள் மட்டுமே...
டைட்டானிக் விபத்து நடந்தது 1912ல்.



Millvina Dean



Millvina என்று அழைக்கப்படும் Elizabeth Gladys Dean 1912ஆம் ஆண்டு, ஃபெப்ரவரி 2ம் திகதி பிறந்தார்.
பிறந்து 2 மாதங்களில் பெற்றோருடன் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்திருக்கிறார்.
அமெரிக்காவில் குடும்பத்தோடு Kansas மாகாணத்துக்கு பயணிக்கும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்து நகழ்ந்த நேரத்தில் Millvinaவின் தந்தை Mr.Dean தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை கப்பலின் மேற்தளத்துக்கு கொண்டு சென்று விட்டுவிட்டார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பிக்க Dean விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.


அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina.
கடந்த சனிக்கிழமை தனது 97வது வயதில் உயிரிழந்து இருக்கிறார் Millvina.
ஆக டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்...


அன்புடன்,
டைட்டானிக் விபத்தில் பிழைத்த கடைசி நபரும் மரணம் !SocialTwist Tell-a-Friend

Saturday 30 May 2009

Captcha - சிறு விளக்கம்...

60 . பின்னூட்டங்கள்
அதிகமான தளங்களில் நாம் நம்மை பதிவு செய்யும் பொழுது (Register) அந்த பக்கத்தை பூர்த்தி செய்வதற்கு முன் உறுதிப்படுத்த சில சொற்கள் அடங்கிய ஒரு படத்தைப் பார்த்து அதிலுள்ள எழுத்துக்களையோ அல்லது எண்களையோ தட்டச்சுவோம் அல்லவா????
அது தான் Captcha.


Captcha என்பது இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ ஒரு கணனியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படும் ஒரு சொற்கள் சார்ந்த புகுதல் உள்ளீடாகும்.
ஒரு மனிதனால் தொடர்பு கொள்ளப்படுகின்றதா அல்லது ஒரு தானியங்கி வழியாக தொடர்பு கொள்ளப்படுகின்றதா என தெரிந்து கொள்ளும் முகமாக இதை பயன்படுத்துகிறார்கள்.
தானியங்கிகளின் செயல்களை தடை செய்யும் முகமாகவே இது நடைமுறைபடுத்தப்படுகிறது.




Captchaவின் பொதுவான வடிவமாக எழுத்துகள் அல்லது எண்கள் அடங்கிய ஒரு சிறு படத்தைப் பார்த்து பாவனையாளர் அதை டைப் பண்ன வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சில தளங்களில் நாம் Audio Captchaகளையும் பார்த்திருப்போம்...
ஏனெனில் இவை அமெரிக்கா, மற்றும் பிற ஆங்கில நாட்டு வல்லுனர்களால் நிறுவப்படுவதால் அவர்களின் வசனநடை தெரிந்தவர்களால் மட்டுமே அதை எதிர்கொள்ள முடியும்.
என்னைப் போன்ற Broken English கேஸ்களுக்கெல்லாம் அது லாயக்கில்லை.. :-)
‘Captcha' என்ற சொல் ‘Capture' என்ற சொல்லிலிருந்து வந்தது.


இந்த முறை முதன்முதலில் 2000ஆம் ஆண்டில் Carnegie Mellon Universityயின் Luis von Ahn, Manuel Blum, Nicholas J. Hopper என்பவர்களாலும் அப்போது IBMல் இருந்த John Langford என்பவராலும் அறிமுகப்படுத்தப்பட்டது.


இவ்வளவு காலமும் சாதாரண Captchaவாக இருந்த இந்த முறை இப்போது reCaptcha என அழைக்கப்படுகிறது.
reCaptcha எனப்படுவது, அதே Carnegie Mellon Universityஆல் விருத்தி செய்யப்பட்ட முறையாகும்.
அதாவது இந்த முறையால் பண்டைய புத்தகங்களை கணனி மயமாக்கும் முயற்சி நடைபெறுகிறது.


தற்போதைக்கு சில பழைய புத்தகங்களும் New York Timesஇன் சஞ்சிகைகளும் கணனி மயமாக்கப்பட்டு வருகிறதாம்.
இதில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் விளைவு.
பழைய புத்தகங்களை பாதுகாப்பதும் இணைய மோசடியை தடுப்பதும் ஒரே நேரத்தில் நடக்கிறது.


Captcha தேவைப்படும் தளங்களுக்கு இந்த reCaptcha சொற்கள் அடங்கிய Captchaகளை வழங்குகிறது.
உதாரணமாக ஒரு புத்தகத்தில் ‘jeyhd' என்ற சொல் இருந்தால் அந்த சொல்லை அப்பிடியே ஸ்கேன் செய்து அந்தப் படத்திற்குறிய இலக்கத்தை அந்த இடத்தில் கொடுத்துவிட்டு அந்த படத்தை Captchaவாக வெளியிடுவார்கள்.
அந்த குறிப்பிட்ட Captchaவை பாவிக்கும் 90 சதவீதமானவர்கள் அதை சரியாகவே அடிப்பார்கள்.
ஆக அதிகமானவர்களால் அடிக்கப்பட்ட சொல்லை தானாகவே அந்த புத்தகத்தின் கணனி வடிவத்தில் சேர்த்து விடுகிறதாம் அவர்களின் மென்பொருள்.
இதன்மூலம் ஒருநாளைக்கு சராசரியாக 160 புத்தகங்களை கணனி மயமாக்குகிறார்களாம். :-)


இந்த முறையைப் பற்றி தெரியாத காலத்திலேயே அதாவது 1997இல் Internet bots எனப்படும் தானியங்கிகள் மூலம் தங்கள் முகவரிகளை தேடற் பொறிகளில் (Search engines) இணைக்காமல் இருப்பதற்காக Andrei Broder, Martin Abadi, Krishna Bharat, Mark Lillibridge என்பவர்களால் பயன்படுத்தப்பட்டது.


ஆரம்ப காலங்களில் இருந்த Captcha இவ்வாறு தான் இருக்கும்.

ஆரம்ப கால Captchas.


பின்பு இதை கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டனவாம்.
அதற்குப்பிறகு சாதாரண optical character recognition (OCR) மென்பொருட்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் தற்போது பாவனையிலுள்ள Captcha அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது பாவனையிலுள்ள reCaptchas.


தற்போது பிரபலமான தளங்களாகிய Facebook, Gmail, Yahoo, MSN, Twitter, StumbleUpon ஆகியவை இந்த reCaptcha முறையை பாவித்து வருகின்றன.


reCaptcha பற்றிய மேலதிக விபரங்களுக்கு (இந்த கட்டுரையை படித்து முடித்துவிட்டு...) இங்கே செல்லவும்.


இந்த முறையைப் பயன்படுத்தி தமிழ் தளங்களில் தமிழ் சொற்களாலான Captchaகளை பயன்படுத்தினால் என்னாகும் என்று யோசித்துப் பார்த்தேன்.
ஒன்னும் தோன்றவில்லை..


உங்களுக்கு ஏதாச்சும் தோன்றினால் அதை பின்னூட்டமாக தெரிவிக்கலாமே...
:-)


அன்புடன்,
Captcha - சிறு விளக்கம்...SocialTwist Tell-a-Friend

Wednesday 27 May 2009

பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப்பாண்டியன் !!!

40 . பின்னூட்டங்கள்
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பர் கார்த்திகைப்பாண்டியனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்...





இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா !!!



நீங்களும் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்க மக்கள்ஸ்..
:-)
பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப்பாண்டியன் !!!SocialTwist Tell-a-Friend

Sunday 24 May 2009

குழந்தைத் தொழிலாளர்கள் - சில படங்கள் !!!

49 . பின்னூட்டங்கள்
சகல நாடுகளிலும் சகல இடங்களிலும் எவ்வளவு சட்டங்கள் இருந்தும் எவ்வளவு பேர் எதிர்க்குரல் கொடுத்தும் முற்றாக ஒழிக்க முடியாத சில விடயங்களில் இதுவும் ஒன்று... “குழந்தைத் தொழிலாளர்கள்

இந்தப் படங்கள் அனைத்தும் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...
இந்த உண்மையான படங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும், இதற்கு உடனடியாக இல்லையாயினும் எப்போதாவது ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகத் தருகிறேன்...
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கவிதையாகவே நான் பார்க்கிறேன்...
அதுவும் அந்த முதலாவது படமும் கடைசி இரு படங்களும் மிகவும் உருக்கம்...
அவர்கள் முகத்தில் தெரியும் அந்த ஏக்கம்..
விபரிக்க வார்த்தைகளேயில்லை...



















என்று தான் ஒழியுமோ இந்த அவலம் ???

குழந்தைத் தொழிலாளர்கள் - சில படங்கள் !!!SocialTwist Tell-a-Friend

Thursday 21 May 2009

என்னடா உலகமிது ???

65 . பின்னூட்டங்கள்
நம்ம நாட்டுல என்னவென்னவோ எல்லாம் நடக்குதுப்பா...
வெற்றித் தளபதி அதிபர் ரா___ஷ போர் எல்லாம் முடிந்துவிட்டது என்று அறிவித்து விட்டாராம்ல...
என்ன கொடும ரா___ஷ இது ???
(இதை சென்னை 28 படத்துல பிரேம்ஜி ஸ்டைல்ல வாசிங்கப்பா...)

இனி நம்ம சமத்துவ இலங்கையில சிறுபாண்மைன்னு ஒன்னே இல்லையாம்ல...
அடேங்கப்பா...
ஏன்யா உங்களுக்கு இப்பிடி ஒரு அறிக்கையை 30 வருஷத்துக்கு முன்னமே விடனும்ன்னு தோனலையா???
அப்பாவி மக்களாவது பிழைச்சிருப்பாங்கல்ல???
செஞ்சு முடிக்க வேண்டிய அநியாயங்களையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு இப்ப விடுறாங்களாம்ல அறிக்கை..
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்துக்கா இந்த அறிக்கை ???

இலங்கை தொலைக்காட்சிகள் அனைத்திலும் நேற்றும், நேற்றைக்கு முந்தைய நாளும் ஒரே காட்சிகள் தான்..
அது தான் தசாவதாரம் படத்தின் பார்ட் - 2வாம்...
என்னா மேக்கப் ??
சும்மா சொல்லக் கூடாது சிங்கள சகோதரர்களை..
இல்லாத ஒன்னை இருக்குனு காட்டுறதுல தனித் திறமை தான்யா உங்களுக்கு...
தசாவதாரம் பார்ட் - 2வின் ஒரு சின்ன பிட் இங்கே க்ளிக்குங்க...

கடந்த மூனு நாளா நம்ம நாட்டுல ஒரே ஆர்ப்பாட்டம் தான்..
1996ல இலங்கை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில வென்ற போது கூட இந்தளவுக்கு நம் சகோதரர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான் நமக்கு...
என்னா குதூகலம் ???

வீதி எங்கும் வண்டிகளில் கும்பல் கும்பலாக சந்தோஷ பேரணி...
வாத்தியங்கள், இசையுடன்...
அதுல என்ன பெரிய காமடின்னா, நான் அந்தப் பக்கத்தால போயிட்டிருந்த போது வாத்தியத்தில் வாசிக்கப் பட்ட பாடல் “அடி என்னாடி ராக்கம்மா...” எனும் தமிழ்ப் பாடல் தான்..
ஏன்யா இவ்வளவு செய்யத் தெரிஞ்ச உங்களுக்கு தமிழ்ப் பாட்டு இல்லாம பேரனியையும் நடத்த தெரிஞ்சுருக்கணும்ல???
ஓ அதுதான் அன்னையில இருந்து ஜனாதிபதி சொல்லீட்டார்ல.. இனிமே நம்ம நாட்டுல சிறுபாண்மைன்னு ஒன்னு இல்லைன்னு..
ஒருவேளை அதா இருக்கலாம்...

இவ்வளவு காலமும் இலங்கை அரசு சொல்லி வந்த உண்மைகளைப் போலவே இப்போதும் ஒரு பெரிய உண்மையை சொல்லியிருக்காங்க...
அது என்ன உண்மைன்னு கேக்கக் கூடாது..
அதுக்கு தான் தசாவதாரம் பார்ட் - 2 பிட் இமேஜ் தந்துருக்கிறேன்ல...
:-)

நான் குடியிருக்கும் தெருவில் இந்த சந்தோஷத்தை கொண்டாடும் முகமாக ஒரு குடும்பத்தினர் நேற்று தைப்பொங்கலுக்கு நாம் வீட்டுக்கு முன் பானை வைத்து பொங்குவது போன்று பாற்சோறு செஞ்சாங்கப்பா...
ஆஹா என்ன ஒரு கருமாந்திர காட்சி.. ச்சீ கண்கொள்ளா காட்சி அது ...
பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உயிரிழந்து அரசுக்கு கிடைத்த இந்த வெற்றியை (???) வீட்டுக்கு முன் பானை வைத்து பாற்சோறு செய்து கொண்டாடும் அளவுக்கு இருக்கு இதுங்களோட மனநிலை...
(நிறைய எழுதத் தோனுது.. முடியல.. அவ்வளத்தையும் எழுதினா சென்சார் போர்டுக்கு தான் போகும்...)

வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று அரசாங்க விடுமுறை...
நாளையும் வெற்றிவாகை சூடிய படையினருக்கு மரியாதை செய்வதற்காக கொழும்பிலுள்ள பாடசாலைகள் எல்லாம் க்ளோஸ்டு...
இதே வெற்றி வாகை சூடிய (???) படையினர் தான் இரண்டு வருட காலத்துக்கு முன் ஐ.நா.வின் அமைதிப் படை குழுவில் சென்று அங்கு கற்பழிப்பு குற்றத்தில் பிடிபட்டு நொந்து நூடுல்ஸாகி திரும்ப இலங்கை வந்தார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும் நண்பர்களே...
ச்சீ அது இலங்கை படை வீரர்கள் இல்லை.. அவர்கள் மாதிரி வேஷம் போட்ட வேறு சதிகாரர்களாம்ல...
இது அரசு தரப்பு உண்மை... இலங்கை அரசு சொன்னால் அது உண்மையாத் தான் இருக்கும் ...
:-)

சொல்லப் போனா எவ்வளவோ வருது..
ஆனா எவ்வளத்த தான் சொல்லுறது ???
நக்கீரன்ல வந்துள்ள அட்டைப்பட கிராபிக்ஸ் படம் உண்மைன்னு இவங்களுக்கு தெரிய வரும் நேரம் வெகு தொலைவில் இல்லைங்கிறது மட்டும் உண்மை...
அப்போ பார்ப்போம் ரியல் தசாவதார ஹீரோவை...
அதுவரை காத்திருப்போம் நாம் !!!
என்னடா உலகமிது ???SocialTwist Tell-a-Friend

Tuesday 19 May 2009

என்னா அதிர்ஷ்டம் ???

25 . பின்னூட்டங்கள்
6000 அடி உயரத்திலிருந்து பாரசூட் இல்லாமல் குதித்து உயிரோடு இருக்கிறார் ஒரு skydiver.
ஆச்சரியமாக இல்லை???

இங்கிலாந்தின் Tamworth, Staffordshireஐச் சேர்ந்த James Boole என்பவரே இவ்வாறு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்...
இவர் நிலத்தை அடைய சற்று முன்னரே தனது பாரசூட்டை விரித்துள்ளாஅராம்...
சற்று முன்னென்றால் எவ்வளவு நேரம்???
அது தான் ஆச்சரியம் சாமி... நிலத்தை அடைய 2 செக்கண்ட்ஸுக்கு முன் !!!



James Boole



இந்த நபர் ஒரு பிள்ளைக்கு அப்பா.
ஒரு டீ.வி. விவரணச் சித்திரத்துக்காக இன்னொரு Skydiverஐ படம் பிடிக்க சென்றுள்ளார்.

கூட பறந்தவர் தவறாக சிக்னல் கொடுத்ததால் பனி மிகுந்த ஒரு மலையின் உச்சியை அடைய 2 செக்கண்ட்ஸுக்கு முன்னரே தனது பாரசூட்டை விரித்துள்ளாராம்...
6000 அடியிலிருந்து பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள்.
மலையின் உச்சியை வந்தடையும் போது இவரின் கதி 100 mph !!!

James Booleஇன் பின்பகுதி, விலா என்புகள், பற்கள் என்பவற்றுக்கு சிறிது சேதம் ஏற்பட்டிருக்கிறதாம்...

இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்ததாம்.
விபத்து நடந்த உடனே மொஸ்கோவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்களாம்...
இங்கிலாந்துக்கு திரும்ப முதல் கொஞ்சம் உடல்நிலையை தேற்றிவிட்டு செல்வதற்காக ரஷ்யாவில் தங்கியிருக்கிறாராம் இவர்...

இவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்ஜினியர்.
இவர் கடந்த 12 வருட காலமாக பாரசூட்டில் பறந்து பழக்கம் உள்ளவர்.
2000க்கும் மேற்பட்ட தடவைகள் பறந்து அனுபவம் உள்ளவர்...

அவனவன் சைக்கிள் மோதியே எமன்கூட ஐக்கியமாயிடுறானுங்க...
இந்தாளு என்னான்னா அலேக்கா பறந்து வந்தும் அதுவும் பாரசூட் இல்லாம பறந்து வந்து சின்ன விபத்தோட தப்பிச்சிருக்காரு...

என்ன கொடுமை இது சரவணன் ???
:-)
என்னா அதிர்ஷ்டம் ???SocialTwist Tell-a-Friend

Friday 15 May 2009

திரைப்பார்வை - “சர்வம்”...

53 . பின்னூட்டங்கள்


தயாரிப்பு : K.கருணாமூர்த்தி, C.அருண்பாண்டியன்.
இசை : யுவன்ஷங்கர்ராஜா.
ஒளிப்பதிவு : நீரவ்ஷா.
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்.
பாடல்வரிகள் : பா.விஜய்.
கதை, இயக்கம் : விஷ்ணுவர்தன்.

ஹீரோ ஆர்யா, ஒரு ஆர்க்கிடெக்ட்.
படம் தொடங்கியதுமே ஆர்யாவுக்கு ஒரு பாட்டு, இளையராஜா பாடுகிறார்.
என்ன கொடுமையோ ??
சம்பந்தமே இல்லாமல் ஒரு பாட்டு.

கார் ரேஸிங் போட்டியில் ஹீரோயின் த்ரிஷாவைக் காண்கிறார் ஹீரோ.
கண்டதும் காதல் வர ஹீரோயினை துரத்துகிறார்.
த்ரிஷா ஒரு Pediatric Surgeon. த்ரிஷா சேவை செய்யும் மருத்துவமனைக்கு சென்று த்ரிஷாவை சந்திக்கிறார்.

ஒருநாள் த்ரிஷாவை காதலிப்பதாக சொல்லிவிடுகிறார்.
வழக்கம்போல ஹீரோயின் கொஞ்சம் இழுத்துப்பிடிக்கிறார், அப்புறம் ஓகே சொல்லிவிடுகிறார்.

ஆர்யா, த்ரிஷா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கு.
ஆர்யாவும், த்ரிஷாவும் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது வீதியில் ஒரு கம்பத்தில் மாட்டிக் கொண்டிருந்த பட்டம் அறுந்து கீழேவிழ அதிலுள்ள நூல் த்ரிஷாவின் கழுத்தை இறுக்கி த்ரிஷா பலியாகிறாராம்.

மருத்துவமனைக்கு த்ரிஷாவைக் கொண்டுபோயும் காப்பாற்ற முடியவில்லை.
அப்போது இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு த்ரிஷாவின் இதயம் பொருத்தப்படுகிறது.

த்ரிஷாவின் இதயம் பொருத்தப்பட்ட சிறுவன் இமான், அவன் அப்பா நெளஷாட் (இவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை).
இந்த நெளஷாட் ஒருமுறை தன் வண்டியால் ஒரு பெண், ஒரு குழந்தையை இடித்து கொன்றுவிடுகிறார்.
அந்த பெண்ணின் கணவன் தான் வில்லன்.
தன் குழந்தையை பிரிந்து தான் கஷ்டப்படும் வலியை நெளஷாட்டும் உணர வேண்டும் என்பதற்காக இமானை கொல்ல வேண்டும் என தேடுகிறான் வில்லன்.

தன் காதலியின் இதயம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்ற உண்மையை அறியும் ஆர்யா இமானை தேடி சென்று கண்டுபிடித்து விடுகிறாராம்.
ஆர்யாவுக்கு இமானை கொல்ல ஒருத்தன் அலைந்து கொண்டு இருப்பது தெரிந்து விட இமானை தன்னோடு அழைத்துக் கொண்டு போய் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்.
கடைசியில் வில்லன் இமானை கொல்கிறானா அல்லது ஆர்யா இமானை காப்பாற்றுகிறாரா என்பது தான் மீதிக் கதை.

கதை ஏற்கனவே பலமுறை பார்த்த மாதிரி இருந்தாலும் ஆர்யா, த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகள் புதுமையாக இருக்கு.
ஆர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்.
வழக்கம் போல ஹீரோயினுக்கு நடிக்க வாய்ப்பேயில்லை.

பெரிய கூட்டணியோடு தனக்கு வந்த “ரோபோ” பட வாய்ப்பை இந்தப் படத்துக்காக மறுத்த ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா சிறப்பாக தன் பங்கை செய்திருக்கிறார்.
அருமையான லொகேஷன்ஸ்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
பாடல்கள் பார்க்கும் படியாக செய்திருக்கிறார்.

யுவன் இசையில் பாடல்கள் மோசமாக இல்லை.
“சிறகுகள் வந்தது...” பாடல் அருமையாக இருந்தது.
பாடல் வரிகள் மனதில் ஒட்டவில்லை.
ஆனால் என்ன சொன்னாலும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் யுவன்.
பின்னணி இசை படத்திற்கு ஒரு பலம் என்று சொல்ல வேண்டும்.

முழுப் படத்திலும் எங்கும் சலிப்புத் தட்டவேயில்லை.
திரைக்கதையை அதற்கேற்ற விதமாக அமைத்த இயக்குனர் விஷ்ணுவர்தனை பாராட்ட வேண்டும்.

கலை இயக்குனர் யார் என்று தெரியவில்லை.
அருமையான ரசனை அவருக்கு..
செட்கள் எல்லாம் அருமை...

மொத்தத்தில் “சர்வம்” சகலமும் நிறைந்த படம்.
ரொமான்ஸ், சண்டை, செண்டிமென்ட், நகைச்சுவை எல்லாம் அளவாக இருக்கிறது.

தியேட்டரில் போய் பாக்கலாம்.
.
திரைப்பார்வை - “சர்வம்”...SocialTwist Tell-a-Friend

Monday 11 May 2009

கேள்வியும் பதிலும்...

40 . பின்னூட்டங்கள்
இது ஒரு தொடர் பதிவு...

ஆரம்பித்த பெருமைக்குரியவர் நிலாவும் அம்மாவும்.

இதுவரை தொடர்ந்தவர்கள்...


மற்றும் என்னை அழைத்த நண்பர் தேவா.

இதோ கேள்விகளும் பதில்களும்...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனது நிஜப் பெயர் இதுவல்ல.
நான் படித்த பாடசாலை வேத்தியர் கல்லூரி, கொழும்பு. (Royal College, Colombo.)
ஆக என் பெயரை “வேத்தியன்” என வைத்து கொண்டேன்...
பாடசாலை சம்பந்தப்பட்டவை யாருக்கு பிடிக்காமல் போகும்???
ஆக எனக்கு என் பெயர் ரொம்பப் பிடிக்கும்...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

பொதுவாக எதற்கும் நான் அழுவதில்லை. அழுது நேரத்தை வீணாக்காமல் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் சிறந்தது என்று கருதுபவன் நான்...
ஆனால் 4 நாட்களுக்கு முன் விஜய் டீ.வியில் பிரேமின் நடனத்தை பார்த்து சிறிது கண்கலங்கி விட்டேன்...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ம்... என்ன சொல்வது ???
சரி இருந்துட்டுப் போகட்டும், என் கையெழுத்து எனக்குப் பிடிக்கும்...

4.பிடித்த மதிய உணவு என்ன?

நான் வெஜிடேரியன்...
அம்மா கையால் எது சமைத்தாலும் அது எனக்கு நன்றாகத் தான் இருக்கும்...
சோறு, முளைத்த பயற்றம்பயிறு கறி, கத்தரிக்காய் கறி, சாம்பார், பாயாசம்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அந்த இடத்துல நல்லா பேசினா உடனே அவர் என் நண்பர்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் குளிக்கவே அதிகம் விரும்புவேன்...
அலைகளோடு விளையாடும் அந்த அனுபவம் ஒவ்வொரு தடவையும் பிடிக்கும்...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம், அணிந்துள்ள ஆடையும் அதை அணிந்துள்ள விதமும்...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது - இன்னொருவருக்கு சற்றும் யோசிக்காமல் உதவும் குணம் கொஞ்சமாவது உண்டு எனக்கு...

பிடிக்காதது - முன்கோபம்...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இப்போ தான் 20...
திருமண அழைப்பிதழ் ஒவ்வொருவரின் வீடு தேடி வரும் !!! :-)

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் வலையுலக நண்பர்கள் பக்கத்தில் இல்லையென்பது வருத்தம் தான்...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கறுப்பு கலர் டெனிம், கறுப்பு கலர் டீ-ஷேர்ட்...

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒன்றும் பார்க்கவில்லை...
இசைப்புயலின் புயலிசையில் “தென்மேற்குப் பருவக்காற்று...” - படம் - கருத்தம்மா...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பிடித்த நிறமான கறுப்பாக மாறவே விருப்பம்...

14.பிடித்த மணம்?

Play Boy சென்ட்டின் அசத்தலான மணம்... :-)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அபுஅஃப்ஸர்
புதிய பதிவர்களையும் அன்போடு நடத்துபவர்...
நல்ல எழுத்தாளர்...

அ.மு.செய்யது
நல்ல சிந்தனையாளர்...
புதியவர்களை ஊக்கப்படுத்துவதில் இவரும் ஒருவர்...

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

அவரது கவிதைகள் பொதுவாகப் பிடிக்கும். அதுவும் இந்தக் கவிதை ரொம்பப் பிடிக்கும்...


17. பிடித்த விளையாட்டு?

கால்பந்து

18.கண்ணாடி அணிபவரா?

கடந்த இரண்டு வருடமாக அணிகிறேன்...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

யதார்த்தமான எல்லா படங்களும் ரொம்பப் பிடிக்கும்...
நகைச்சுவைப் படங்களும் பிடிக்கும்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஆனந்த தாண்டவம்...

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Oliver Twist - by : Charles Dickens...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றி விடுவேன்...

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் - அமைதியான இரவு நேரத்தில் ஒலிக்கும் புல்லாங்குழலின் இசை (அது சத்தம் அல்ல, இசை...)

பிடிக்காத சத்தம் - வாகனங்களிலிருந்து வரும் எல்லா சத்தங்களும்...
பேரரசு படங்களில் வரும் வில்லன்கள் போடும் “ஏ”, “ஓ” சத்தங்களும் பிடிக்காது... :-)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இலங்கையை விட்டு நான் சென்றது என்றால் நயினாதீவு... :-)

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் சுருதி, தாள, லய நயத்தோடு பாட்டு பாடத் தெரியும்...
மிருதங்கம் மற்றும் Drums வாசிப்பேன்...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கைத் துரோகம்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்னர் சொன்னது போல முன்கோபம்...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஹவாய் தீவுகள்...
இது வரை சென்றது கிடையாது.. ஒரு நாள் செல்வேன்...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர் புகழும் அளவுக்கு இல்லையென்றாலும் மற்றவர் மதிக்கும் அளவுக்கு பெற்றவர்களின் மதிப்பு குறையாமல் இருக்க வேண்டும்...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

என்னத்தச் சொல்ல...
திரும்பவும் சொல்றேன்... இப்போ தான் 20...
இன்னும் 10 வருஷம் போனாலும் எனக்கு 20 தான்... ஏன்னா சொன்னத மாத்திச் சொல்ற பழக்கம் எனக்கு கிடையாதுல்ல... :-)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுமளவுக்கு இன்னும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை...
அந்தளவுக்கு அனுபவமும் கிடையாது...

இந்தத் தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள், எனது நண்பர்கள்...

1. அபுஅஃப்ஸர் - என் உயிரே



வந்து எழுதி அசத்துங்க நண்பர்களே !!!
கேள்வியும் பதிலும்...SocialTwist Tell-a-Friend
 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.