Wednesday 22 October 2008

கிளியும் நானும்


வந்த நாளன்றே
வரவேற்பளித்து
வணக்கம் சொல்லி
சொன்னதற்க்கு
பதில் பல கூறி
சம்பந்தப்பட்டும்
படாமலும்
தெளிவாய் இருந்தும்
இல்லாதவனாய்
நடிப்பா இல்லை
நகைப்பா என்று
அறிந்தும் அறியாமலும்
மணி ஒலிக்குமுன்
வருவான்
இவன்
இடைவேளையிலும்
இருப்பான்.
வணிகம் படித்த போதிலும்
வண்ணத்துப்பூச்சி
பிடித்தான்
தொடர்மாடிதனில்
குடியிருந்தான்
நீரின் பயன் மூன்று
கேட்டிடுவான்
நங்கையர் தாய்தனை
தொலைபேசி தனில்
அழைத்து
கூறிடுவான்
முப்பயன்கள்
ஒன்று குடிப்பதற்கு
இரண்டு குளிப்பதற்கு
மூன்று கு.... கழுவுவதற்கு (?)
கறுப்பியுடன் (Metho)காதல் கொண்டான்
அது ஆணா பெண்ணா
யாமறியோம்
பாடிடும் வேளை தனில்
பேய் உண்ட
பலாக்கனியாய்
வந்து
பழ - பலான மொழி கூறி
மானமிழப்பான்
அது உண்டா இவனுக்கு
இழப்பதற்க்கு
சிரிப்பு போலீஸ்
இவன்
பெயரில் இருவருளர்
ஒருவன்
விஞ்ஞானி
எம்மவன் மெய்ஞ்ஞானி
கிளிப்பிள்ளை என்று
அழைத்தனர் இவனை
கிளி என்கிறோம்
இன்று
எமைப்பிடித்த ஏழரையா?
ஆறடி கோமாளியா?
யாமறியோம் பராபரமே !!!!
கிளியும் நானும்SocialTwist Tell-a-Friend

2 . பின்னூட்டங்கள்:

பழமைபேசி on 5 January 2009 at 08:52 said...

ரொம்ப நல்லா இருக்குங்க!

வேத்தியன் on 5 January 2009 at 12:30 said...

நன்றி நன்றி...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.